ஏழை மாணவர்கள் இலவச கல்விக்கு விண்ணப்பிக்கலாம் – சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு!!

1

தமிழகத்தில் உள்ள 4 மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் மட்டும் சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச கல்விக்கு விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கல்லூரிகள் விண்ணப்பம்:

தமிழகத்தில் யாரும் எதிர்பாராத வகையில் தீடிரென 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கி விட்டனர். அடுத்து என்ன படிப்பது? எது படித்தால் எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகள் உள்ளது? என தேட ஆரம்பித்து விட்டனர். இந்த முறை கொரோனா தொற்று காரணமாக அனைத்தும் ஆன்லைன் வழியாகவே செய்யப்படுகிறது. தமிழக இன்ஜினியரிங் படிப்புகளுக்கு கவுன்சலிங் விண்ணப்ப செயல்முறைகளும் நடைபெற்று வருகிறது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பமும் இன்று முதல் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச கல்விக்காக ஏழை, எளிய மாணவர்கள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜூலை 27ம் தேதி முதல் விண்ணப்ப செயல்முறை தொடங்கும் என கூறப்பட்டு உள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here