மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 7,500 பணியிடங்களை நிரப்ப SSC தேர்வாணையம் போட்டித்தேர்வுகளை அறிவித்துள்ளது. இதோடு ரயில்வே துறை, வங்கி பணியாளர் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் பலரும் கலந்து கொண்டு வெற்றி பெற “நான் முதல்வன்” திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதன்படி போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு நிபுணத்துவம் உடைய ஆசிரியர்களை கொண்டு இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வாரியாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
2வது பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு ரூ.6,000 உதவித்தொகை., ஒரே தவணையா வாங்கிக்கங்க??
இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களது புகைப்படம், ஆதார் எண், போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்த சான்று, வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து முன்பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பை தவற விடாமல் தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறும் அறிவுறுத்தி உள்ளனர்.