பிரான்ஸ் நாட்டில் உருமாறிய கொரோனா தொற்றால் நான்காம் அலை ஏற்பட கூடும் என்று பிரான்ஸின் அறிவியல் ஆலோசகர் அர்னாட் ஃபோண்டனெட் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
உலக நாடுகளில் உருமாறிய டெல்டா ரக கொரோனா வைரசால் உலக நாடுகளில் இரண்டாம் அலை பரவல் ஏற்கனவே உருவாக்கியது. இந்தியாவில் உச்சத்தை தொட்ட கொரோனா பரவல் தற்போது குறைந்துள்ளது. இந்தியாவில் ஏற்பட்ட இரண்டாம் அலை பரவலுக்கு முழு காரணம் உருமாறிய டெல்டா ரக கொரோனா வைரஸ் என்று கூறப்படுகிறது. தற்போது டெல்டா பிளஸ் ரக கொரோனா வைரஸும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் அடுத்த சில மாதங்களில் கொரோனாவின் மூன்றாம் அலை இந்தியாவைத் தாக்கலாம் என நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். இந்நிலையில் உலக நாடுகளை அச்சுறுத்தும் டெல்டா ரக வைரஸால் நான்காம் அலை ஏற்படக்கூடும் என்று பிரெஞ்சு அரசாங்கத்தின் அறிவியல் ஆலோசகர் அர்னாட் ஃபோண்டனெட் ஒரு திடுக்கிடும் தகவலை அளித்துள்ளார்.
மேலும் இந்த நான்காம் அலையின் போது நாட்டின் தேவையான மருத்துவ தேவைகள் இருப்பதை உறுதி செய்யவேண்டும். அப்போது தான் கடுமையான சிக்கல்களுக்கும் மரணங்களுக்கும் இந்த நான்காம் அலை வழிவகுக்காது என்று கூறியுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்