Friday, April 19, 2024

அயோத்தி ராமர் கோவிலின் மெகா பூமி பூஜை – பிரம்மாண்ட மேடை தயார்!!

Must Read

ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கி ராம் ஜன்மபூமி தளத்தில் மூன்று நாள் வேத சடங்குகளுடன் விழாவிற்கு விரிவான திட்டத்தை அயோத்தியில் தயார் செய்துள்ளனர். ஆகஸ்ட் 5 ம் தேதி ராம் கோயில் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டலாம், மேலும் முதல்வர் உத்தவ் தாக்கரேவும் இந்த விழாவில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.
முந்நூறு பேருக்கு அழைப்பு:
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் ஆகியோருக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.
Ayodhya Ram Mandir
Ayodhya Ram Mandir
மொத்தத்தில், சுமார் 300 பேருக்கு அழைப்பு அனுப்பப்படலாம்.ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கி ராம் ஜன்மபூமி தளத்தில் மூன்று நாள் வேத சடங்குகளுடன் விழாவிற்கு விரிவான திட்டத்தை அயோத்தியில் தயார் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 4 ஆம் தேதி ராமாச்சார்யா ‘பூஜை’ மற்றும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ‘பூமி பூஜை’ மதியம் 12:15 மணியளவில் நடைபெறும்.
முதல் முறை:
5 ஆம் தேதி ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அமைப்பதாக பிரதமர் அறிவித்திருந்ததைத் தொடந்து பிரதமர் மோடி அயோத்தி மற்றும் ராமர் கோவில் பகுதிக்கும் வருவது இதுவே முதல் முறையாகும்.
கோவில் வடிவமைப்பு:
‘பூமி பூஜை’ விழாவின் போது கருவறைக்குள் ஐந்து வெள்ளி செங்கற்கள் அமைக்கப்படும். முதலாவது பிரதமர் மோடியால் போடப்படும். ஐந்து செங்கற்கள் இந்து புராணங்களின்படி ஐந்து கிரகங்களை குறிக்கும் என்று நம்பப்படுகிறது.
Ayodhya Temple Model
Ayodhya Temple Model
கோயிலின் வடிவமைப்பும் கட்டிடக்கலையும் விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) முன்மொழியப்பட்டதைப் போன்றது – வடிவமைப்பு விஷ்ணு கோயிலின் நாகரா பாணியைப் பின்பற்றும், அதே நேரத்தில் கர்பக் கிரஹம் எண்கோணமாக இருக்கும்.
Ayodhya Ram Mandir
Ayodhya Ram Mandir
உத்தவ் தாக்கரே:
ராமர் கோயில் இயக்கத்துடன் சிவசேனாவின் நீண்ட தொடர்பு காரணமாக மகாராஷ்டிரா முதல் அமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பு விடுக்க முடிவு எடுக்கப்பட்டது. இடிப்பு வழக்கில் உத்தவின் தந்தை பாலாசாகேப் தாக்கரே பெயரிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Maharashtra CM Uddhav Thackeray
Maharashtra CM Uddhav Thackeray
இந்த ஆண்டு மார்ச் மாதம், தாக்கரே அயோத்தியில் ராவமர் கோவில் கட்டுவதற்கு ரூ .1 கோடி உதவி அறிவித்தார், அதே நேரத்தில் தனது கட்சியான சிவசேனா, பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டாலும், இந்துத்துவாவில் உறுதி  கொண்டுள்ளது என்பதை தெளிவு படுத்தினார்.
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -