கொரோனா பாதிப்புகளை கண்காணிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவலின் இரண்டாம் அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதிகபட்சமாகத் தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரம் வரை சென்றது. இதனால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பத் தொடங்கின. இதனால் மாநிலத்தில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டது.
தற்போது தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. இதேபோல் குணமடைந்து திரும்புவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இது மக்களுக்கு சற்றே நம்பிக்கை தரும் விதமாக உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு கொரோனா பாதிப்புகளை கண்காணிக்க 13 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பூர்ணலிங்கம் இந்த குழுவிற்கு தலைமை தாங்குகிறார். இக்குழுவில் மருத்துவ வல்லுநர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர் இடம்பெற்று உள்ளனர்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!