மனித குலத்திற்கு வனவளம் மிகவும் அவசியம், எனவே வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முக்கிய உத்தரவு :
கடந்த சில நாட்களாக தமிழக வனப்பகுதிகளில் பலவித ஆக்கிரமிப்புகள் நடந்து வருகிறது. இது குறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசுக்கு வழங்கியுள்ளது. அதாவது வழக்கை விசாரித்த நீதிபதிகள், “வன வளமே மனித குலத்திற்கு முக்கிய ஆதாரமாக திகழ்ந்து வருகிறது.
இந்த வளங்கள் இல்லை என்றால், நிச்சயம் மனித இனம் இந்த பூமியில் உயிர் வாழ முடியாது என வேதனை தெரிவித்தனர். இது மட்டுமில்லாமல், தமிழக காடுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என அரசுக்கு உத்தரவிட்டனர். எனவே, இந்த தீர்ப்பு மெச்சத்தக்க வகையில் உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்