சென்னையை சேர்ந்த Vinata Aero Mobility என்ற நிறுவனம் பறக்கும் காரை கண்டுபிடித்து, அதற்கான சோதனையை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் முன்னிலையில் நிகழ்த்தியுள்ளது.
சோதனை ஓட்டம்:
சென்னையை சார்ந்த Vinata Aero Mobility என்ற பெயர் கொண்ட பிரபலமான நிறுவனம் தம் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை சோதனை செய்துள்ளது. இந்த நிறுவனம், அண்மையில் தயாரித்த பறக்கும் காரை சோதனைக்கு உட்படுத்தி உள்ளது. இந்த சோதனை ஓட்டத்தில் கலந்து கொண்ட மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியா, இந்த கண்டுபிடிப்பு போக்குவரத்து துறையில் ஒரு சாதனையை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இது மட்டுமல்லாமல், சோதனைக்கு பிறகு தரையிலும் வானிலும் பயணிக்கும் இந்த பறக்கும் கார் பொது மக்களின் பயன்பாட்டுக்கு, சரக்கு ஏற்றி செல்லும் சாதனமாகவும், அவசர கால மருத்துவ பயன்பாட்டுக்கு உபயோகபடுத்தப்படும் என உறுதியளித்தார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்