கொரோனாவின் பிடியிலிருந்து விடுபட்ட நிலையில் தற்போது அசாம் மாநிலமானது பிரம்மபுத்திரா ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மட்டுமல்லாமல் காட்டு உயிரினங்களும் உயிரிழந்து வருகின்றன.
அஸ்ஸாமில் வெள்ளப்பெருக்கு:
உலகம் முழுவதுக்கும் பெரும் பாதிப்பாக இருந்த கொரோனா என்னும் பெருந்தொற்றிலிருந்து தற்போது படிப்படியாக மீண்டு வருகிறார்கள் மக்கள். இதனை கட்டுப்படுத்த அறிவியலாளர்கள் பெரும் முயற்சியை மேற்கொண்டு தடுப்பூசி என்னும் பேராயுதத்தை கண்டு பிடித்தனர். இந்த தடுப்பூசியின் கொரோனாவின் பாதிப்பை தற்பொழுது மெதுவாக கடந்து வருகின்றோம்.
தற்பொழுது அசாம் மாநிலத்தில் பெரும் பாதிப்பாக பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலமானது பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் கிட்டத்தட்ட 700 கிராமங்கள் நீரில் மூழ்கின. 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இதனால் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். மேலும் பல கிராமங்கள் நீரில் தத்தளித்து வருகின்றது. இத்தகைய வெள்ளப்பெருக்கினால் அதிகமான மக்கள் பாதுக்காப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இம்மக்களின் நிலையை பார்த்து மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் படகுகளை பயன்படுத்தி அவர்களை மீட்டு வருகின்றனர். இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தவெள்ளத்தால் மனிதர்கள் மட்டுமல்லாமல் காசிரங்கா தேசிய பூங்காவில் இருக்கும் உயிரினங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளது என்பது வேதனைக்குரியது. இந்த வெள்ளத்தில் சிக்கி 3 காட்டு குதிரைகள், 2 மான்கள் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்