
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் விமான போக்குவரத்து பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த பயணம் மேற்கொள்வதற்காக பயணிகளிடம் சேவை, வளர்ச்சி உள்ளிட்ட வரிகளுடன் முன்பதிவு டிக்கெட்களை விமான நிறுவனங்கள் விநியோகம் செய்து வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ஆனால் பயணிகள் சில நேரங்களில் பயணங்களை ரத்து செய்யும் போது அவர்களிடம் வசூல் செய்யப்பட்ட முன்பதிவு தொகை முழுமையாக திருப்பி வழங்கப்படுவதில்லை. மாறாக வரி கட்டணங்கள் பிடித்தம் போக மீதத் தொகை விமான நிறுவனம் திருப்பி வழங்குகிறது. இதுகுறித்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என MP கனிமொழி உள்ளிட்ட பலரும் ஒன்றிய அரசிடம் புகார் செய்து வந்தனர்.
+1, +2 பொதுத்தேர்வு எதிரொலி.., பள்ளி நேரத்தை மாற்ற பெற்றோர்கள் கோரிக்கை!!!
இந்நிலையில் விமான போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே.சிங் அவர்கள் விமான நிறுவனங்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி விமான பயணிகள் பயணத்தை ரத்து செய்யும் பட்சத்தில் முன்பதிவின் போது பெறப்பட்ட முழு தொகையையும் எந்தவித பிடித்தம் இல்லாமல் திருப்பி அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.