தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் இப்போது தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வினால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது தமிழகத்தின் கடலோரத்தில் உள்ள 14 மாவட்ட மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆழ் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ள அனைத்து மீனவர்களும் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தாறுமாறாக உயரும் காய்கறிகளின் விலை…, ஒரு கிலோ வெங்காய, தக்காளியின் நிலவரம் உள்ளே!!