உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி குரோஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பெண்களுக்கான 25 மீட்டர் பிரிவில் இந்தியாவின் ரஹி சர்னோபத் தங்கம் வென்று சாதனை படைத்தது உள்ளார். தற்போது நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில் இதுவே இந்தியாவின் முதல் தங்கப்பதக்கம் ஆகும்.
ஒசிஜெக் நகரத்தில் ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை ரஹி சர்னோபத் 39 புள்ளிகளையும், பிரான்ஸ் வீராங்கனை 31 புள்ளிகளையும் பெற்றனர். இதையடுத்து துப்பாக்கி சுடுதல் போட்டியில் பிரான்ஸ் வீராங்கனையை பின்னுக்கு தள்ளி இந்திய வீராங்கனை ரஹி சர்னோபத் முதல் இடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்று உள்ளார்.
இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மற்றொரு இந்திய வீராங்கனை மனு பாகெர், 7 வது இடத்தை பெற்று பின்தங்கிய நிலையில் உள்ளார். மேலும் இந்த உலக கோப்பையில் ஏற்கனவே இந்தியா ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று இருந்தது. இந்நிலையில் இந்த தங்கப்பதக்கம் உலக கோப்பை போட்டியில் இந்தியா பதிவு செய்த முதல் தங்கப்பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்