பல விதிகளை மீறி கொடைக்கானலில் உள்ள பேரிஜம் பகுதிக்குள் சென்று மீன்பிடித்ததற்கு வனத்துறையினர் அபராதமாக 2000 மட்டும் விதித்து உள்ளனர், நடிகர்கள் சூரி மற்றும் விமலுக்கு. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் இதே தவறை செய்த இளைஞர்களுக்கு 40,000 அபராதம் விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
விதி மீறல்:
கொடைக்கானலில் உள்ளது பேரிஜம் என்ற அடர்ந்த வனப்பகுதி. அந்த வனப்பகுதிக்கு செல்ல காவல் துறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்று தான் செல்ல வேண்டும் .
சட்டை பட்டனை மூடாமல் ரசிகர்களுக்கு அந்த இடத்தை காட்டிய ‘டிடி’ – வைரல் போட்டோஸ்..!
இந்த நிலையில், கடந்த மாதம், 17 ஆம் தேதி நடிகர்கள் விமல், சூரி மற்றும் இவர்களுடன் 2 இயக்குனர்கள் கொடைக்கானல் பேரிஜன் பகுதியில் சென்று மீன் பிடித்து உள்ளனர். இவர்களை அந்த ஊர் மக்கள் காவல்துறையிடமும், வனத்துறை அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்து இருந்தனர்.
அபராதம் விதித்த வனத்துறை :
இதனால், போலீசார் இவர்களுக்கு உதவிய வனத்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தது. இதற்கு மத்தியில் நடிகர்கள் இருவரும் காங்., முன்னாள் எம்.பி.,யின் வாரிசுகள் இருவரின் உதவியை நாடியுள்ளார். இவர்களுக்கும், வன துறையினர் அபராதம் விதித்து உள்ளனர், ஆனால் கொஞ்சம் தாராள மனசுடன்.
இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன் இளைஞர்கள் மீன் பிடித்தனர், அவர்களுக்கு 40,000 அபராதம் விதித்த வனத்துறை, நடிகர்களுக்கு 2,000 மட்டுமே விதித்து உள்ளது. இது அவர்கள் ஒரவஞ்சனையாக நடந்து உள்ளது தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து டி.எஸ்.பி., ஆத்மநாதன் கூறுகையில்” அவர்களுக்கு வனத்துறை அபராதம் விதித்து விட்டது. இன்னும், சில முகாந்திரம் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்படும்” என்று தெரிவித்து உள்ளார்.