‘பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம்’ – நிதித்துறை செயலாளர் குற்றச்சாட்டு!!

0

கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு மத்திய அரசு விதிக்கும் வரி தான் காரணம் என்று நிதித்துறை செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசல்:

கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிப்பால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது இதுகுறித்து நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி நேர்மறையாகவும், இந்த ஆண்டு 2.02 சதவீதமாக இருக்கும் என்றும் கூறினார். மேலும் மாநிலத்தில் மொத்த கடனானது 15வது நிதிக்குழு அளித்த குறியீட்டிற்குள் தான் உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் வரும் காலங்களில் தமிழகத்தின் வருவாய் 18 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தமிழக அரசு அடுத்த நிதியாண்டில் கடன் வாங்கும் அளவும் குறையும் என்று அவர் கூறினார். மேலும் பேசிய அவர், பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்புக்கு மத்திய அரசு தான் காரணம்.

தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை உயர்த்தியுள்ளது. இதனால் தான் தற்போது விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றார். மேலும் மத்திய அரசின் வரையறுக்கப்பட்ட அளவில் தான் தமிழகம் கடன் வாங்கும் அளவு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here