தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வருவதால் தடைபட்டு இருந்த அரசின் பல்வேறு பணிகளும் தற்போது மும்முரம் நடைபெற்று வருகிறது. மேலும் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் எளிதில் வாக்காள அட்டை பெற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதையடுத்து சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்களை ஏற்படுத்தி வாக்காள அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல், திருத்தம் செய்தல் போன்ற பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இத்திட்டம் பெரிதும் வரவேற்கப்பட்டதால் சிறப்பு முகாம்களில் மக்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர்.
ப்பா, சூர்யாவுக்காக இப்படி பட்ட நெஞ்சங்கள் இருக்கா.., உண்மையிலேயே இது ரொம்ப பெரிய விஷயம்!!
இதைத்தொடர்ந்து மாநில அளவிலான வாக்காளரின் இறுதிப் பட்டியலை தேர்தல் ஆணையர் சத்யபிரபா வெளியிட்டுள்ளார். இதில் சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிகபட்ச வாக்காளர்களும், துறைமுகங்களில் குறைந்தபட்ச வாக்காளர்களும் உள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 6.20 கோடி வாக்காளர்கள் உள்ளதாக பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.