நடப்பு ஆண்டிற்கான IPL தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில் அவ்வப்போது வீரர்களிடையே நடைபெறும் மோதலும் ரசிகர்களிடையே ஸ்வாரசியத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், IPL போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை தோற்கடித்த பிறகு, விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த சம்பவம் தான் அன்றைய நாளில் ட்ரெண்டிங் ஆக இருந்தது. இப்போது கம்பீர் மற்றும் கோலிக்கு இடையில் ஏற்பட்ட சண்டை ஒன்றும் புதிதல்ல. அதாவது, கடந்த 2013 ஆம் ஆண்டு RCB மற்றும் KKR அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.
விரைவில் துவங்கும் ‘காந்தாரா 2’ படப்பிடிப்பு…, உற்சாகத்தில் ரசிகர்கள்….,
அந்த வாக்குவாதம் இன்று வரையும் மைதானத்தில் தொடருகிறது. இந்த நிலையில் விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீருக்கு இடையே நடைபெறும் சண்டையை கதாப்பாத்திரங்களாக வடிவமைத்து புதிய கேம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான வீடியோ ஒன்று ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.