FIFA உலக கோப்பை தொடரில் கத்தார் அணி 1-3 என்ற கோல் கணக்கில் செனகல் அணியிடம் வீழ்ந்து தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.
FIFA உலக கோப்பை:
FIFA உலக கோப்பை தொடரில், குரூப் A யில் இடம் பெற்றுள்ள, கத்தார் அணியானது செனகல் அணியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த ஆட்டத்தின் முதல் 40 நிமிடம் வரையில் இரு அணிகளும் ஒரு கோலுக்காக அதிக முறை முயற்சித்து வந்தனர். பல முயற்சிகளுக்கு பிறகு முதல் ஆட்ட நேரம் முடியும் தருவாயில், (41 மற்றும் 48 வது நிமிடத்தில்) செனகல் அணியின் பவுலே தியா மற்றும் ஃபமாரா டிடியோ இரு கோல்கள் அடித்தனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனால், முதல் ஆட்ட நேர முடிவில் செனகல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியில், 78 வது நிமிடத்தில், முகமது முந்தாரி கத்தார் அணி சார்பாக ஒரு அடிக்க, ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. ஆனால், 84 வது நிமிடத்தில் செனகல் அணியின் பாம்பா டைங் ஒரு கோல் அடித்து, அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
பிங்க் பாந்தர்ஸிடம் வீழ்ந்த தமிழ் தலைவாஸ்…, புள்ளிப்பட்டியலில் திடீர் சரிவு!!
இந்த போட்டியின் முடிவில், செனகல் அணி 3-1 என்ற கோல் கணக்கில் கத்தார் அணியை வீழ்த்தியது. குரூப் A யில், நெதர்லாந்து அணிக்கு எதிராக ஈக்வடார் அணி மோதியது. இந்த போட்டியானது, 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இதன் மூலம், குரூப் A, நெதர்லாந்து மற்றும் ஈக்வடார் அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்திலும், செனகல் அணி 3 புள்ளிகளுடன், 3வது இடத்திலும் உள்ளது. இதில், கத்தார் அணி ஒரு புள்ளி கூட எடுக்காமல் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இதனால், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு குறைவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.