FIFA உலக கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் ஈகுவடார் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் கத்தார் அணி இன்று பலப்பரீட்சை செய்யவுள்ளது.
உலக கோப்பை கால்பந்து:
உலக அளவில் உள்ள கால்பந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த, FIFA உலக கோப்பை கால்பந்து தொடர் இன்று கத்தாரில் தொடங்க உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த உலக கோப்பை தொடரில், நடப்பு ஆண்டு 32 அணிகள் 8 பிரிவின் கீழ் தலா 4 அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதில், ஒவ்வொரு குரூப் உள்ள 4 அணிகலும் முதலில் மற்ற அணிகளுக்கு எதிராக, லீக் சுற்றுகள் போல் தங்களுக்குள் போட்டி போடு கொள்ள உள்ளன. இதன் முடிவில் முதல் 8 குரூப்பிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். இதனை தொடர்ந்து, காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் டிசம்பர் 9ம் தேதி முதல் 18 ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
தொடர்ந்து 4 சதங்கள் அடித்த தமிழக வீரர்…, உலக அளவில் சாதனை படைத்து அசத்தல்!!
இந்த வகையில், முதல் லீக் சுற்று போட்டியில், குரூப் A யில் உள்ள கத்தார் அணிக்கு எதிராக ஈகுவடார் அணி இன்று இரவு மோத உள்ளது. இதில், கத்தார் அணியானது தனது சொந்த மண்ணில் உலகக்கோப்பைக்கான முதல் போட்டியை விளையாட இருக்கிறது. கத்தார் அணி வெற்றியுடன் இந்த உலக கோப்பை தொடங்கும் என உள்ளூர் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். இது குறித்து, கத்தார் அணியின் பயிற்சியாளர், முதல் உலக கோப்பை போட்டி என்பதால் நெருக்கடி அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.