FIFA உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில், கத்தார் அணியை 0-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ஈகுவடார் அணி வெற்றியுடன் உலக கோப்பை பயணத்தை தொடங்கியது.
FIFA உலக கோப்பை:
கால்பந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த, FIFA உலக கோப்பை கால்பந்து தொடர் நேற்று கத்தாரில் கோலாகலமாக கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. இந்த உலக கோப்பை தொடரில், 32 அணிகள் 8 குரூப்களின் கீழ் தலா 4 அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த வகையில், குரூப் A யில் இடம் பெற்றுள்ள, கத்தார் அணி தனது சொந்த மண்ணில் ஈகுவடார் அணிக்கு எதிராக நேற்று முதல் போட்டியில் விளையாடியது. இதில், 5 வது நிமிடத்திலேயே ஈகுவடார் வீரர் தனது தலையால் முட்டி கோல் ஒன்றை அடித்தார். ஆனால், அந்த கோலானது ஆப் சைட் என்பதால் மறுக்கப்பட்டது. இதையடுத்து, மீண்டும் வேகம் காட்ட ஆரம்பித்த ஈகுவடார் அணி, கத்தார் வீரர் செய்த சிறு தவறை பயன்படுத்தி பெனால்டி வாங்கியது.
இவர மாதிரி ஒரு வீரரை என் வாழ்நாளில் பார்த்ததே கிடையாது.., நியூசிலாந்து கேப்டன் ப்ளீச் பேட்டி!!
இந்த பெனால்டியை ஈகுவடாரின் என்னர் வலென்சியா கோலாக மாற்றினார். இதனை தொடர்ந்து, 31 வது நிமிடத்திலும் என்னர் வலென்சியா கோல் அடித்து அசத்தினார். இதனால், 2-0 என்ற கோல் கணக்கில், ஈகுவடார் அணி முன்னிலை பெற்றிருந்தது. கடைசி வரை, ஒரு கோலுக்காக கத்தார் அணி முயற்சித்து மட்டுமே வந்ததால், உள்ளூர் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. இதில், 2-0 என்ற கோல் கணக்கில் ஈகுவடார் அணி கத்தார் அணியை வீழ்த்தி வெற்றியுடன் உலக கோப்பை பயணத்தை தொடங்கியது. .