FIFA உலக கோப்பை தொடரில், ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி அணிகளுக்கு இடையிலான போட்டியானது சமநிலையில் முடிந்தது.
FIFA உலக கோப்பை:
கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில், குரூப் E யில் இடம்பெற்றுள்ள ஸ்பெயின் அணியை எதிர்த்து ஜெர்மனி அணி மோதியது. இந்த போட்டியில், இரு அணிகளும் முதல் நேர ஆட்ட முடிவில், ஒரு கோலுக்காக பல முறை முயற்சித்தனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனாலும், இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்காத நிலையில், ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் இல்லாமலே முடிந்தது. இதையடுத்து தொடங்கிய, 2வது பாதியில், வேகம் காட்ட தொடங்கிய ஸ்பெயினின் அல்வரோ மொராட்டா 62 வது நிமிடத்தில் கோல் ஒன்றை அடித்து அசத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும், ஜெர்மனியின் நிக்லாஸ் ஃபுல்க்ரக் 83 வது நிமிடத்தில் கோல் ஒன்றை அடித்தார்.
புரோ கபடி லீக் : குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்திய தமிழ் தலைவாஸ்…, புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம்!!
இதனால், இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தனர். இதன் பிறகு, இரு அணி வீரர்களும் ஒரு கோல் கூட அடிக்காத நிலையில், போட்டியானது டிராவில் முடிந்தது. இந்த போட்டியின் விளைவால், குரூப் E யில் ஸ்பெயின் அணி விளையாடிய 2 போட்டியில் 1ல் வெற்றி 1ல் டிரா செய்து 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஜெர்மனி அணியானது ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது.