உலக கோப்பை கால்பந்து தொடரில், கானா அணிக்கு எதிராக ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
FIFA உலக கோப்பை:
கத்தாரில் நடைபெற்று வரும் FIFA உலக கோப்பை கால்பந்து தொடரின் முதல் லீக் சுற்றில், குரூப் H யில் இடம்பெற்றுள்ள போர்ச்சுகல் மற்றும் கானா அணிகள் மோதின. இந்த போட்டியின், முதல் ஆட்ட நேரத்தில், போர்ச்சுகலின் ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கார்னர் கீக் மூலம் கிடைத்த பந்தை தன் தலையால் முட்டி கோல் போட முயன்றார். ஆனால், கோல் செல்ல தவறியதால், இரு அணிகளும் 0-0 என முதல் ஆட்ட நேரத்தில் இருந்தன.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதையடுத்து, தொடங்கிய 2வது பாதியில், போர்ச்சுகல் அணிக்கு கிடைத்த பெனால்டி கிக்கை ரொனால்டோ கோலாக மாற்றினார். இதனால், போர்ச்சுகல் அணி 1-0 என முன்னிலைப் பெற்றது. இதனை தொடர்ந்து, 73 வது நிமிடத்தில், கானா வீரர் ஒரு கோல் அடிக்க, 78 வது நிமிடத்தில், போர்ச்சுகல் வீரர் கோல் அடித்து பதிலடி கொடுத்தார். இதனால், போர்ச்சுகல் வீரர் மேலும் ஒரு கோல் அடிக்க, 3-1 என கானா அணி பின்தங்கியது.
கானா அணி சுதாரித்து கொண்டு, ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் ஒரு கோல் அடித்தனர். இதனால், ஆட்ட நேர முடிவில், 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில், ரொனால்டோ கோல் அடித்ததன் மூலம், 2006, 2010, 2014, 2018 மற்றும் 2022(நடப்பு) ஐந்து உலக கோப்பையிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அடைந்தார்.