FIFA உலக கோப்பை தொடரில் வேல்ஸ் அணிக்கு எதிராக ஈரான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்று முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
FIFA உலக கோப்பை:
கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் முதல் போட்டியை விளையாடி முடித்துள்ளனர். இதையடுத்து, இன்று குரூப் B யில் உள்ள வேல்ஸ் மற்றும் ஈரான் அணிகள் தங்களது 2வது போட்டியில் மோதின.
IND vs NZ: 16 பந்தை எதிர்கொண்டாலும் சுரேஷ் ரெய்னா சாதனையை முறியடித்த தமிழக வீரர்!!
இந்த போட்டியில், முதல் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் ஒரு கோலுக்ககாக கடுமையாக போராடி வந்தனர். ஆனால், இரு அணிகளும் முதல் பாதியில் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியில் இரு அணிகளும் கடுமையாக போராடினார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால், ஆட்டத்தின் ஸ்டாப் ஸ்டேஜில் ஈரானின் ரூஸ்பே செஷ்மி (90+8) மற்றும் ரமின் ரெசையன் (90+11) இரு கோல்கள் அடித்தனர். இதனால், ஈரான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தி இந்த உலக கோப்பையின் முதல் வெற்றியை அடைந்தது. இந்த வெற்றியால், ஈரான் அணி குரூப் B யில் 3 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ளது.