பல பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஏற்கனவே காசி கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது காசியின் தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல பெண்களை மோசடி செய்த வழக்கு..!
தமிழகத்தில் பல பெண்களிடம் சமூக வலைத்தளங்கள் மூலம் பழகி ஆபாச படம் எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த காசி என்பவரை போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து அவர் மீது 4 பெண்களும் ஒரு இளைஞரும் அளித்த புகாரின் அடுத்து ஒரு போக்சோ வழக்கு, 2 பாலியல் வழக்குகள் ஒரு கந்துவட்டி வழக்கு என 6 வழக்குகள் பதியப்பட்டன. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு உதவி செய்ததாக அவரது நண்பர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
இதையடுத்து தற்போது காசி மீதான கந்து வட்டி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். மேலும் பைக்கை அபகரித்தது தொடர்பாக தனியார் வங்கியில் இருந்தவர்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இருந்தவர்கள் காசிக்கு உதவி செய்ததாக சொல்கிறார்கள். அதனால் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரி, வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக சம்பந்தப்பட்டவர்கள் 6 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
காசியின் தந்தை கைது..!
இதற்கிடையே காசியின் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. காசியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட செல்பேசி, மடிக்கணினி, மெமரி கார்டு, ஆகியவற்றை ஆய்வு செய்த சைபர் கிரைம் போலீசார் அதில் இருந்து ஏராளமான ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாக தெரிவித்தனர். மேலும் இந்த ஆதாரங்களை காசியின் தந்தை பாண்டியராஜன் அளித்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் பணமோசடி செய்த வழக்கில் தடயங்களை அழித்ததாக காசியின் தந்தை பாண்டியராஜனை சிபிசிஐடி போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.