சில தினங்களுக்கு முன்பு சுங்கச்சாவடி இல்லாத இந்தியா உருவாகும் என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சர் தனது அறிக்கையை வெளிட்டிருந்தார். தற்போது இதனை உறுதி படுத்தும் வகையில் இன்று இரவு முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும் ஃபாஸ்டேக் இல்லையெனில் இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சுங்கச்சாவடி:
தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி அமைத்து வாகன ஓட்டிகளிடம் இருந்து பணம் வசூலித்து வருகின்றனர். அதன் பின்பு சிறிது காலத்திற்கு பின்பு ஃபாஸ்டேக் என்னும் ஆன்லைன் பண பரிவர்த்தனை சேவை துவக்கப்பட்டது. ஃபாஸ்டேக் சேவையை பயன்படுத்துபவர்கள் ஆன்லைன் மூலம் பணத்தை செலுத்திவிடலாம். மேலும் இவர்கள் சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நிலை ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது. சில தினங்களுக்கு முன்பு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது விரைவில் சுங்கச்சாவடி இல்லாத இந்தியா உருவாகும் என்று கூறியுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனை தற்போது உறுதி செய்யும் வகையில் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அது என்ன வென்றால் இன்று இரவு முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று அறிவித்துள்ளார். இனி சுங்கச்சாவடிகளில் நேரில் பணம் செலுத்த கூடாது எனவும் வாகன ஓட்டிகள் அனைவரும் ஃபாஸ்டேகை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்மூலம் சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல்கள் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஃபாஸ்டேக் மின்னணு அட்டையை பெறுவதற்கு எளிமையான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிரடி விலை உயர்வுடன் 2020ஆம் ஆண்டை நிறைவு செய்த தங்கம் – பொதுமக்கள் கலக்கம்!!
வங்கிகள், சுங்கச்சாவடிகள் மற்றும் தனியார் சேவை மையங்களில் தங்களது ஆதார் அட்டை மற்றும் வண்டியின் ஆர்சி நகலை வைத்து ஃபாஸ்டேக் மின்னணு அட்டையை எளிதில் பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் யாராவது ஃபாஸ்டேக் மின்னணு அட்டையை பெறவில்லை என்றால் நாளை முதல் இருமடங்கு கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளது. இந்த அறிக்கையால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதனை நடைமுறை படுத்துவதில் சிக்கல் இருப்பதாகவும் எனவே நடைமுறை காலத்தை நீடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் தங்களது கோரிக்கையை வைத்துள்ளனர். இதனையடுத்து பிப்ரவரி 15 வரை காலாவகாசத்தை நீட்டித்துள்ளது.