ஐபிஎல் தொடருக்கான லீக் சுற்றுகள் அனைத்தும் வரும் மே 21ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த லீக் சுற்றுகளின் முடிவில், புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். தற்போது வரை, 70 லீக் போட்டிகளில் 63 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் குஜராத் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மீதமுள்ள 3 இடங்களை உறுதி செய்வதற்கான போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக முறை ஆட்ட நாயகன் விருதை வென்ற வீரர்களுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில், ராஜஸ்தானின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 முறை இந்த விருதை வென்று முதலிடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து, லக்னோ அணியின் மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் CSK அணியின் ஜடேஜா தலா 3 முறையும் ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளனர்.
கற்பனை பண்ண முடியாத கவர்ச்சி.., அதை குட்டி உடையில் காட்டி கிறங்கடிக்கும் கிரண்!!
மேலும், இந்த ஐபிஎல் தொடர் மூலம் CSK அணியின் தல தோனியும் எந்த ஒரு வீரரும் படைக்காத சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அதாவது, கடைசி 2 ஓவர்களில் மட்டும் 1000 ரன்களை எடுத்த ஒரே வீரர் ஆவார். இவர் சென்னையில் நடப்பு ஐபிஎல்லின் கடைசி லீக் போட்டியை விளையாடிய பிறகு, ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தின் மினியேச்சரை பரிசாக அளித்துள்ளனர்.