ஆசிய கோப்பை தொடருக்கான நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்கள் அனைவரும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நிகழ்த்தியுள்ளனர்.
மைதானத்தில் பறந்த இருக்கைகள்!
ஆசிய கோப்பை தொடருக்கான அனைத்து ஆட்டங்களும் முடிவடையுள்ள நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இந்த இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தகுதி சுற்று ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதன் மூலம் இறுதி போட்டிக்குள் நுழைந்து உள்ளது. பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் இந்திய அணியிடம் படுதோல்வி அடைந்தாலும் அதன் பிறகு நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக அடி வெற்றிகளை குவித்தது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதனால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த நாட்டு ரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். அந்நேரத்தில் அவர்கள் மைதானத்தில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டு இருந்த வேளையில், அது தோல்வி அடைந்த ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் தாங்கிக் கொள்ள முடியாத ஆப்கானிஸ்தான் அணி ரசிகர்கள் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தனர்.
அதன் விளைவாக மைதானத்தில் இருந்த அனைத்து நாற்காலிகளை வீசி எறிந்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். மேலும் போட்டியை காண வந்திருந்த பாகிஸ்தான் ரசிகர்களையும் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் தாக்கினர். இதனால் மைதானத்தில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த போலீசார்கள் அனைவரும் இரு நாட்டு ரசிகர்களையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதற்கான வீடியோ இணையத்தில் வைரலாகி வர இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் போட்டி பார்க்க வந்தது ஒரு குத்தமா இப்படியா பண்ணுவீங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Can @ShjPolice identify the Afghan fans who are mercilessly beating Pakistani fans on the streets of Sharjah? pic.twitter.com/zdVtQoe5UE
— صحرانورد (@Aadiiroy2) September 7, 2022