இறந்து போனதாக இணையத்தில் வெளியான வதந்தி – கோபத்தில் கொந்தளித்த விஷாலின் பாட்டி!!

0
கோபத்தில் கொந்தளித்த விஷாலின் பாட்டி
கோபத்தில் கொந்தளித்த விஷாலின் பாட்டி

தமிழ் சினிமாவில், பாட்டி கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரபல நடிகை குலப்புள்ளி லீலா நாச்சியார், இறந்து போனதாக வெளியான வதந்திகளுக்கு, சம்பந்தப்பட்ட அந்த நடிகையே  கண்டனம் தெரிவித்துள்ளார்.

 நடிகை கண்டனம் :

தமிழ் சினிமாவில், புகழ் பெற்ற குணச்சித்திர நடிகையாக விளங்கி வந்தவர் குலப்புள்ளி லீலா நாச்சியார். ரஜினியின் முத்து படத்தின் மூலம் அறிமுகமான இவர், இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அண்மையில் மாஸ்டர், அரண்மனை 3, அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். விஷாலுக்கு பாட்டியாக இவர் நடித்த மருது திரைப்படம், இவருக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது.

இந்த நிலையில், இவர் திடீரென இறந்து விட்டதாக யூடியூப் சேனல் ஒன்று, தவறான செய்தி வெளியிட்டது. இதனால் பொதுமக்கள்  பலரும், இவருக்கு இரங்கல் செய்திகள் போட ஆரம்பித்துவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாட்டி நடிகை லீலா, காசுக்காக இப்படி எல்லாம் செய்வீர்களா? என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், உயிரோடு இருக்கும் ஒருவர் செத்துப் போனதாக சொல்லித்தான் நீங்கள் சம்பாதிக்க வேண்டுமா? என  வாய்க்கு வந்தபடி திட்டி உள்ளார். இந்த செய்தி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here