பிரபல மூத்த எழுத்தாளர் திடீர் மறைவு – காற்றில் கரைந்த வாசகமே என ரசிகர்கள் உருக்கம்!!

0

பிரபல மூத்த எழுத்தாளர் வாத்தியார் R.S.ஜேக்கப் உடல்நலக்குறைவு காரணமாக தனது 96வது வயதில் காலமான செய்தி வாசகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

எழுத்தாளர் மறைவு:

தூத்துக்குடி மாவட்டம், ராஜாவின் கோயில் என்ற கிராமத்தில் 1926ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி பிறந்தவர் ஆர் எஸ் ஜேக்கப். திருநெல்வேலியின் அரசு போதனை முறை பயிற்சி பள்ளியில் இரண்டு ஆண்டுகள் பயின்ற இவர், அங்குள்ள சைவசித்தாந்த கழகத்தில் சேர்ந்து தமிழில் வித்வான் என்ற பட்டம் பெற்றார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தனது எழுத்துக்கள் மூலம் குரல் கொடுத்த இவர், வாத்தியார் என்ற புதினம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

இதையடுத்து மக்கள் பலரும் இவரை “வாத்தியார் ஜேக்கப்” என்றே அழைத்தனர். திருநெல்வேலி சதி வழக்கில் கைதான 93 பேரில், ஆர் எஸ் ஜேக்கப் வாத்தியாரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 96 வயதான இவர், உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக நேற்று இரவு சென்னையில் காலமானார். இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here