விஷால் பட நடிகை தூக்கிட்டு தற்கொலை – காதல் தோல்வியில் 29 வயதில் வாழ்க்கை முடிந்த சோகம்!!

0

தமிழின் முன்னணி நடிகையும், இன்ஸ்டா பிரபலமான நடிகை தீபா என்கிற பவுலின் , தனது 29 வயதில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனால் அவருடைய பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தூக்கிட்டு தற்கொலை:

தமிழ் சினிமாவில் வாய்தா என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தீபா என்கிற பவுலின். இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர், விஷாலின் துப்பறிவாளன் படத்தில் நடித்துள்ளார்.

விருகம்பாக்கத்தில் உள்ள மளிகை அவன்யூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த இவர், தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள, தீபாவின் அண்ணன் ரமேஷுக்கு போன் செய்த, அவருடைய ஆண் நண்பர் தீபா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ், தீபா எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர். தீபா அந்த கடிதத்தில் தாம் ஒருவரை காதலித்து வந்ததாகவும், காதல் சேராததால் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் எழுதி வைத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

29 வயதான தமிழ் நடிகை, தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பாடல் ஆசிரியர் மகள் தூரிகை, தற்கொலை செய்து கொண்ட நிலையில், தொடரும் இந்த பிரபலங்களின் தற்கொலையால், திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here