பிரபல சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர் திடீர் மறைவு – இந்திய திரையுலகம் திரண்டு வந்து அஞ்சலி!!

0
சினிமா உலகில் தொடரும் உயிர் இழப்புகள்.. அடுத்து ஒரு நடிகர் மரணம் - வேதனையில் திரையுலகம்!
சினிமா உலகில் தொடரும் உயிர் இழப்புகள்.. அடுத்து ஒரு நடிகர் மரணம் - வேதனையில் திரையுலகம்!

தெலுங்கு திரையுலகில், முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்த ஸ்ரீ நாராயணதாஸ் நரங் கேரி, உடல்நலக்குறைவு காரணமாக தனது 76 வது வயதில் இன்று காலமாகியுள்ளார்.

திடீர் மறைவு:

தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்தவர் ஸ்ரீ நாராயணதாஸ் நரங் கேரி. இவர் விநியோகிஸ்தராகவும், தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 20வது தமிழ் மற்றும் தெலுங்கு படத்தை தயாரித்து வருகிறார். 76 வயதான இவர், உடல் நலக்குறைவு காரணமாக, இன்று ஹைதராபாத்தில் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் மகேஷ் பாபு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சோகத்துடன் பதிவிட்ட நடிகர் சிவகார்த்திகேயன், “எங்கள் அன்பான தயாரிப்பாளர் மறைவு கேட்டு அதிர்ச்சியடைந்தேன் என்றும், அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என்று டுவிட் செய்துள்ளார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 4 மணிக்கு, மகா பிரஸ்தானம் அருகில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here