ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகி – இசை உலகினர் பயங்கர அதிர்ச்சி!!

0

இசை திரையுலகில், பிரபல பின்னணி பாடகியாக உள்ள லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்று காரணமாக, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாடகிக்கு கொரோனா :

இந்தியாவின் இசைக்குயில், மெலடி குயின் என்ற பெயர்களால் அழைக்கப்படுபவர் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர். தன் இளம் வயதில் இருந்து பாட ஆரம்பித்த அவர், இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். திரையுலகத்தில்,  கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இவர்,  மிக உயர்ந்த விருதான “பாரத ரத்னா” விருதை பெற்றுள்ளார். அதுபோல தாதா சாகேப் பால்கே விருது, பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

கடந்த 1973 ஆம் ஆண்டு, ஆர்.டி பர்மன் இசையமைத்து வெளிவந்த “பரிஜாய்” என்ற திரைப்படத்தில் அவர் பாடிய “பீதி நா பிட்டை” என்ற பாடல் அவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்தது. தமிழில் இவர் பாடிய வளையோசை, செண்பகமே செண்பகமே, எங்கிருந்தோ அழைக்கும் உள்ளிட்ட பல்வேறு பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவை.  92 வயதான இவர், கொரோனா தொற்று ஏற்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு லேசான அறிகுறிகள் உள்ளதாக அவரது மருமகள் ரச்சனா உறுதிப்படுத்தி உள்ளார். அங்கு அவர் ஐசியூவில், அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். அவர் மீண்டு வர, அவரது ரசிகர்கள் வேண்டுதல் வைத்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here