சடலமாக மீட்கப்பட்ட பிரபல பாடகி.. அதிர்ச்சியில் ரசிகர்கள் – குற்றவாளிகள் கைது!

0
சடலமாக மீட்கப்பட்ட பிரபல பாடகி.. அதிர்ச்சியில் ரசிகர்கள் - குற்றவாளிகள் கைது!

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பிரபல பாடகி காணாமல் போய் 12 நாட்களுக்கு பிறகு உடல் சிதைந்த நிலையில் பிணமாக கண்டெடுத்துள்ளனர். இந்த கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை வழக்கு:

ஹரியானாவை சேர்ந்த பிரபல பாடகியான சங்கீதாவை கடந்த மே 11 ஆம் தேதி முதல் காணவில்லை என பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தனர். போலீசார் எங்கு தேடியும் சங்கீதாவை கண்டுபிடிக்க முடியாததால் சங்கீதா கடத்தப்பட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் உள்ள பைனி பைரன் என்னும் கிராமத்தில் ஒரு பெண்ணின் உடல் சிதைந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. கடத்தி சென்றதாக வழக்கு பதிவு செய்துள்ள சங்கீதாவின் உடலாக இது இருக்குமோ என சந்தேகத்தில் உடலை போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தினர்.

பின்பு, ஆய்வில் சடலமாக கிடப்பது சங்கீதா தான் என்பது நிரூபணமானது. பின்பு, கொலை வழக்கில் போலீசார் இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் திட்டமிட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். சங்கீதா பாடும் போது வீடியோ எடுப்பதாக கூறி அழைத்து வந்து கொலை செய்ததாக குற்றவாளிகள் கூறியுள்ளனர். வேறு யாருக்காவது இந்த கொலையில் சந்தேகம் இருக்கிறதா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல் போய் 12 நாட்களுக்கு பிறகு பாடகி பிணமாக மீட்கப்பட்டுள்ள செய்தி ஹரியானா மாநிலம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here