23 வயது சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை – லிவிங் டுகெதரில் நடந்த சோகம்! போலீஸ் தீவிர விசாரணை!!

0
23 வயது சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை - லிவிங் டுகெதரில் நடந்த சோகம்! போலீஸ் தீவிர விசாரணை!!

ஓடியா மாநிலத்தைச் சேர்ந்த, 23 வயதான பிரபல சீரியல் நடிகை ராஷ்மி ரேகா ஓஜா, தனது காதலருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த நிலையில், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

 தற்கொலை செய்த நடிகை :

ஒடியா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சீரியல் நடிகை  ராஷ்மி ரேகா ஓஜா. 23 வயதான இவர், பிரபல தொடர்களில் நாயகியாக நடித்து வந்தார். இவர் தனது காதலரான சந்தோஷ் பத்ரா என்பவருடன் நய பள்ளி பகுதியில் உள்ள வாடகை வீட்டில் லிவ்விங் டுகெதர் முறையில் வசித்து வந்தார்.

இந்நிலையில், இவர் கடந்த ஜூன் 18-ஆம் தேதி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மரணத்திற்கு, அவருடைய காதலர் தான் காரணம் என அவரது பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இது குறித்து பேசிய நடிகையின் தந்தை, அவர் இறந்த செய்தியை எங்களுக்கு சொன்னது சந்தோஷ் தான் இன்றும், இதுவரை தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.

அதுபோல, நடிகை ராஷ்மி எழுதிய, கடைசி கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதில், ஐ லவ் யூ San பேபி என தன் காதலரின் பெயரை குறிப்பிட்டு, தன் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதியுள்ளார். போலீசார், இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here