சின்னத் திரையுலகத்தை சேர்ந்த பிரபல சீரியல் நடிகை கல்யாணி, தனது தாய் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவத்தை, இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகை அதிர்ச்சி:
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கல்யாணி. கடந்த 2013 ஆம் ஆண்டு, பிரபல மருத்துவரை திருமணம் செய்துகொண்ட இவர், ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு, தனது பக்கத்து வீட்டில் தனது தாயுடன் இருந்தபோது நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்றை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதாவது, அம்மாவுடன் ஜிம்மிற்கு செல்ல தயாரானேன். அப்போது, அம்மா மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார். ஒரு சிறு வேலை காரணமாக வீட்டிற்கு சென்று திரும்பிய 20 நிமிடத்திற்குள், யாரும் எதிர்பாரதவிதமாக தற்கொலை செய்து கொண்டார்.
தூக்கில் பிணமாக தொங்கிய அவரைப் பார்த்தபோது, அப்போதே நான் செத்துப் போகலாம் என்று தோன்றியது. 23 வயதில் தனக்கு, இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. அந்த நேரத்தில் எனக்கு, நம்பிக்கை கொடுத்தது எனது கணவர் தான், மேலும், மக்களுக்கு இதுபோன்ற தற்கொலை எண்ணங்களை மாற்ற ஹெல்ப் லைன் வசதி கிடைக்க வேண்டும் என்றும், இதன் மூலம் பலரது வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும் என்றும் இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்