இந்திய சினிமாவின், புகழ்பெற்ற இசைக்கலைஞராக திகழ்ந்த ஷிவ்குமார் ஷர்மா, மாரடைப்பு காரணமாக தனது 84 வயதில் இன்று காலமாகியுள்ளார்.
போட்டோஷூட் செய்ய வேற இடமே கிடைக்கலையா., பாத் டப்பில் போஸ் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா!
இசையமைப்பாளர் மறைவு:
இந்திய சினிமாவில் புகழ்பெற்ற இசைக் கலைஞராக திகழ்ந்தவர் இசையமைப்பாளர் ஷிவ்குமார் ஷர்மா. 84 வயதான இவர், சந்தூர் என்கிற இசைக்கருவியை வாசிப்பதில் புகழ் பெற்றவராக விளங்கினார். சந்தூர் மேஸ்ட்ரோ என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட இவர், இவர் சில்சிலா, லம்ஹே, சாந்தினி உள்ளிட்ட பல இந்திப் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இதுவரை பத்மஸ்ரீ, பத்ம விபூஷன் போன்ற பல்வேறு உயரிய விருதுகளை பெற்று, பெருமையுடன் திகழ்ந்து வந்தார். கடந்த சில தினங்களாக நுரையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த இவர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலை 9 மணியளவில் இவர் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு, திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் வாதிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இரங்கல் பதிவிட்டுள்ள, பிரதமர் நரேந்திர மோடி இவரது இசை வருங்காலத் தலைமுறைகளுக்கு பொக்கிஷமாக அமையும் என்றும் அவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள், ஓம் சாந்தி என்று பதிவிட்டுள்ளார்.
Our cultural world is poorer with the demise of Pandit Shivkumar Sharma Ji. He popularised the Santoor at a global level. His music will continue to enthral the coming generations. I fondly remember my interactions with him. Condolences to his family and admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) May 10, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்