அறுவை சிகிச்சை செய்த இளம் நடிகை பலி – மருத்துவமனையில் நேர்ந்த சோகம்!!

0

தனது உடல் எடையை குறைக்க, மருத்துவமனையில் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்த பிரபல இளம் வயது நடிகை மருத்துவமனையிலேயே பலியான சோகம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இளம் நடிகை மரணம்:

மாடலிங் மற்றும் சினிமா துறையில் இருப்பவர்கள் ஒல்லியாக இருக்க வேண்டும் என்ற பிம்பம் தற்போது பரவலாக காணப்படுகிறது. இதனால்,  நடிகைகள் தொடர்ந்து தங்கள் அழகில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஒரு சிலர் இன்னும், அடுத்த கட்டத்திற்கு சென்று பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றை மேற்கொள்கின்றனர். இந்த நிலையில், 21 வயதான இளம் கன்னட சீரியல் நடிகை சேத்னா ராஜ், தனது உடலில் உள்ள கொழுப்பை குறைக்க அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

பெற்றோரின் அனுமதி இல்லாமல் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், சர்ஜரி செய்த இவர் திடீரென உயிரிழந்துள்ளார். இவரது இறப்புக்கு காரணம் மருத்துவமனையின் கவனக்குறைவு தான் என்றும், சரியான மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் இந்த சர்ஜரி நடந்திருப்பதால் தான் காரணம் என்றும் இவரது பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர். மேலும், நுரையீரலில் அதிகம் தண்ணீர் சேர்ந்ததால் தான் அவர் மரணமடைந்தார் என மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இதையடுத்து, மருத்துவமனை மீது சட்டப்படி வழக்கு தொடரப்போவதாக நடிகையின் அப்பா தெரிவித்திருப்பது கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here