இந்த மாதிரி கதை இருந்தா சொல்லுங்க – இயக்குனர்களிடம் கண்டிஷன் போட்ட ரவுடி பேபி சாய் பல்லவி!!

0
சாய் பல்லவியை திட்டி விளாசிய முன்னணி நடிகை

பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள, நடிகை சாய் பல்லவி தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் புது கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

கண்டிஷன் போட்ட நடிகை :

மலையாளத்தில் பிரேமம் என்ற படத்தில் மலர் டீச்சராக நடித்து, பலரது மனதை கொள்ளை கொண்டவர் நடிகை சாய் பல்லவி. முதல் படமே சினிமாவில் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து தமிழில் சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகருடன் இணைந்து, தமிழில் சிகரம் தொட்டார். தனுசுடன் இவர் ஆடிய “ரவுடி பேபி” பாடல், சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதோடு சேர்த்து இவர் அண்மையில் நடித்த பாவ கதைகள் வெப் சீரிஸ் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது அவர் டோலிவுட்டில் பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் புது கண்டிஷன் போட்டுள்ளார்.

சும்மா பாடல்களுக்கு டான்ஸ் ஆடுவது, 3 அல்லது 4 காட்சிகளில் வந்து விட்டுப் போவது போன்ற கதைகளில் நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். பெரிய இயக்குனர் மற்றும் நடிகர் என எதுவும் தேவை இல்லை….. தனது கதாபாத்திரத்திற்கு அழுத்தமான முக்கியத்துவம் கொடுத்தால் மட்டும் போதும், அப்படிப்பட்ட கதை இருந்தால் சொல்லுங்கள், மற்ற கதைகளில் நான் நடிக்கப் போவதில்லை என கறாராக பேசியுள்ளார். அவரது, இந்த அதிரடி அறிவிப்பால் இயக்குனர்கள் மிரண்டு போய் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here