பிரபல நாட்டுப்புற பாடகியான அனிதா குப்புசாமி வட நாட்டு மக்களுக்கு ஆதரவாக சோசியல் மீடியாவில் பேசிய கருத்து ஒன்று, மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வெடித்த சர்ச்சை :
தமிழ்நாட்டின் முன்னணி நாட்டுப்புற பாடகரான புஷ்பவனம் குப்புசாமி, இதுவரை பல பாடல்கள் பாடியுள்ளார். இவர் தன்னுடன் சென்னை கல்லூரியில், படித்த அனிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் சேர்ந்து சினிமா மற்றும் மேடை கச்சேரிகள் என பலவற்றில் கலக்கியுள்ளனர். இந்த நிலையில், சமீபகாலமாக தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக பல்வேறு சர்ச்சைகள் கிளம்பி வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதுகுறித்து, பேட்டி ஒன்றில் பேசிய போது அனிதா குப்புசாமி சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி உள்ளார். அதாவது, எதற்கெடுத்தாலும் வடநாட்டுக்காரர்களை குறை சொல்லும் கூட்டம் இங்கு உள்ளது. என் கணவர் தமிழ் பாடல் பாட, கிராமியக் கலையை வளர்க்க வாங்க என்று சொன்னபோது இங்குள்ள தமிழர்களில் யார் வந்தது? என்னை வட நாட்டுக்காரி என்று குறிப்பிடுகிறீர்கள். இவரு நிறத்தை காட்டி எந்த தமிழ் பொன்னும் கல்யாணம் பண்ணிக்க முன் வரல..,
வி.ஏ.துரைக்கு 5 லட்சம் கொடுத்த சூர்யா.., ரஜினி என்ன செஞ்சிருக்காரு.., அம்பலமான உண்மை!!
நான் தான் இவரை கல்யாணம் செய்துகொண்டேன், என் கணவரின் நிறத்தை கூட பார்க்காமல், அவரை கல்யாணம் செய்து, இன்று கிராமிய கலைகளை வளர்த்து வருகிறோம். முதலில், இது போன்ற தேவையற்ற பேச்சுக்களை விடுங்கள் என பேசி உள்ளார். இந்த வீடியோவில் தமிழர்களை சில இடங்களில் இவர் தாழ்த்தி பேசியதாக, தற்போது எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
View this post on Instagram