தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி இயக்குனரான பி எஸ் மித்ரனுக்கு, பிரபல பத்திரிக்கையாளர் ஆஷா மீரா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
திருமண நிச்சயதார்த்தம்:
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி இயக்குனராக திகழ்பவர் பி எஸ் மித்ரன். இவர் கடந்த, 2018 ஆம் ஆண்டு நடிகர் விஷாலின் நடிப்பில், உருவாகிய இரும்புத்திரை என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தின் மூலம் வெற்றி இயக்குனராக மாறினார். தொடர்ந்து, சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ என்ற படத்தை இயக்கினார். ஆனால், இந்தப் படம் எதிர்பார்த்த அளவு ஹிட் கொடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தியை வைத்து சர்தார் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.
விரைவில், இந்த படம் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில், பிரபல இயக்குனர் மித்ரனுக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. பிரபல பத்திரிக்கையாளர் ஆஷா மீரா என்பவரை இவர் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் பலரும், திருமணம் செய்து கொள்ளப் போகும் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்