சினிமா துறையில் ஏற்பட்ட சோகம்.. புற்றுநோயால் பிரபல இயக்குனர் திடீர் மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
சினிமா துறையில் ஏற்பட்ட சோகம்.. புற்றுநோயால் பிரபல இயக்குனர் திடீர் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி!

பிரபல இயக்குனர் ஜி.எஸ்.பணிக்கர் புற்று நோயால் உயிரிழந்துள்ளார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜி.எஸ்.பணிக்கர் மரணம்:

மலையாள சினிமா வட்டாரங்களில் முன்னாள் இயக்குனராக வலம் வந்தவர் தான் பிரபல இயக்குனர் ஜி.எஸ்.பணிக்கர். இவர் ‘ஏகாகினி’ என்கிற படத்தை 1976 ஆம் ஆண்டு இயக்கி  சினிமா துறையில்  இயக்குனராக அறிமுகமானார். இவர் எடுத்த முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அதன் பிறகு ‘பாண்டவபுரம்’ நாவலை பணிக்கர் திரைப்படமாக எடுத்து மக்களிடையே மிகவும் பிரபலமானார். இந்நிலையில் அவர் கடைசியாக தயாரித்த படத்தில் இருந்து உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சினிமாத்துறையில் இருந்து சிறிது விலகி இருந்தார்.

குறிப்பாக பிரபல இயக்குனர் ஜி.எஸ்.பணிக்கர் புற்று நோயின் காரணமாக கிட்ட தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் அவதிப்பட்டுள்ளார். இதனால்  சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் புற்றுநோய் கடைசி கட்டத்தை எட்டியதால் மருத்துவர்கள் கை விரித்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரின் இறப்பால் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here