36 வயதான பிரபல ஆடை வடிவமைப்பாளர் பிரத்யுஷா கரிமெல்லா, தனது பூட்டிக்கில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சி மரணம் :
பிரபல ஆடை வடிவமைப்பாளரான பிரத்யுஷா கரிமெல்லா, என்ற நடிகை பஞ்சாராரா ஹில்ஸ் பகுதியில் பூட்டிக் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். 36 வயதான இவர், இந்தி மற்றும் தெலுங்கு சினிமா பிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த 10ஆம் தேதி, தனது தோழியுடன் தங்கப் போவதாக பெற்றோரிடம் தெரிவித்து விட்டு போனவர், அதன்பிறகு வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து, ஆடை வடிவமைப்பாளரின் தந்தை சனிக்கிழமை அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, எந்த பதிலும் இல்லை. இதையடுத்து சந்தேகமடைந்த அவர், பூட்டிக் வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, அவரது மகள் கையில் தற்கொலை கடிதத்துடன் கழிவறையில் இறந்து கிடந்துள்ளார். இவர் இறப்பதற்காக கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்