போதைப்பொருள் வழக்கில் கைதான வாரிசு நடிகர் – நள்ளிரவு பார்ட்டியில் போலீசார் அதிரடி நடவடிக்கை!!

0
போதைப்பொருள் வழக்கில் கைதான வாரிசு நடிகர் - நள்ளிரவு பார்ட்டியில் போலீசார் அதிரடி நடவடிக்கை!!

பெங்களூர் நகரில், நள்ளிரவில் நடந்த பார்ட்டி ஒன்றில் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் சித்தாந்த் கபூர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிரடி கைது :

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் சித்தாந்த் கபூர். இந்தி திரையுலகை சேர்ந்த, நடிகர் சக்தி கபூரின் மகனான இவர் மீது அதிரடி குற்றம் தற்போது சுமத்தப்பட்டுள்ளது. இவர் பெங்களூரில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் நள்ளிரவில் நடந்த பார்ட்டியில் சித்தாந்த் கலந்து கொண்டார். இந்த பார்ட்டியில் போதை பொருள் பயன்படுத்தப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் 35 பேருக்கு ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை மேற்கொண்டனர். இவர்களில், 5 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து பாலிவுட் நடிகர் சித்தாந்த் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன்பின் அவர் மீது குற்றம் இல்லை என தீர்ப்பளிக்கப்பட்டு அண்மையில் விடுதலை ஆனார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பாலிவுட் வாரிசு பிரபலம் கைது செய்யப்பட்டிருப்பது இந்தி திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here