அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி மாற்றம் – மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

0

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அலங்காநல்லூரில் நடத்தப்படும் உலக புகழ் வாய்ந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் தேதி மாற்றப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தேதி மாற்றம் :

தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக போட்டி நடைபெறுமா என்ற பலத்த சந்தேகம் மக்கள் மத்தியில் இருந்து வந்தது. இதையடுத்து, கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுடன் இந்த போட்டி கட்டாயம் நடைபெறும் என அரசு அண்மையில் தெரிவித்தது. இந்த நிலையில், உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வருகிற ஜனவரி 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருந்தது.

ஆனால், அன்றைக்கு அரசு அறிவித்த முழு ஊரடங்கு அமலில் இருப்பதால், அன்றைய தினத்தின் போட்டியை மாற்றி வைப்பது குறித்து விழா கமிட்டியினரிடம் மதுரை மாவட்ட கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை அடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய  அவர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வருகிற ஜனவரி 17ம் தேதி நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி எந்தவித பிரச்சனையும் இல்லாமல், வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் முக்கிய கருத்தாக இருந்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here