நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவான வண்ண வண்ண பூக்கள் படத்தின் நாயகியாக அறிமுகமான நடிகை வினோதினி பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை:
தமிழ் சினிமாவில் 90ஸ் ஹீரோயின்களுக்கு தற்போது வரை தனி இடம் உண்டு. அந்த வகையில், இயக்குனர் கஸ்தூரி ராஜாவால், நடிகையாக அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை வினோதினி. தமிழ் சினிமாவில் நுழைந்த முதல் படமான ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக வண்ண வண்ண பூக்கள் என்ற படத்தின் வாயிலாக பிரபல நடிகையாக மாறினார்.
இந்த படத்தில் இடம் பெற்றுள்ள “கண்ணம்மா காதல் எனும் கவிதை சொன்னது..உன் பிள்ளை தமிழில்” என்ற பாடல் இன்று வரை பட்டி தொட்டியெங்கும் ஒலித்து வருகிறது. இதையடுத்து, பல ஆண்டுகளுக்கு பின் இவர் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்