
இன்றைய காலகட்டத்தில் திருமண தம்பதிகள் பலரும் அதிக குழந்தைகளை பெற்றெடுக்க விரும்பாததால், ஓரிரு குழந்தைகளுடன் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்கின்றனர். அந்த வகையில் மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த தம்பதிகள் 3 பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை பெற்ற பிறகு குடும்ப கட்டுப்பாடு செய்துள்ளனர். ஆனால் நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சரியாக சிகிச்சை மேற்கொள்ளாததால், மற்றொரு கரு உருவாக காரணமாகியது.
Enewz Tamil WhatsApp Channel
இதனால் தம்பதிகள் குழந்தையை வளர்க்க போதிய நிதி இல்லை. எனவே கருவை கலைக்க அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், குழந்தையை பராமரிக்க அனைத்து உதவிகளும் ஏற்படுத்தி தரப்படும் என உத்தரவிட்டு இருந்தார். அதன்படி தம்பதிகளுக்கு சரிவர சிகிச்சை செய்யாததால் இழப்பீடு தொகையாக ரூ.3 லட்சம், குழந்தைக்கு 21 வயது ஆகும் வரை மாதந்தோறும் ரூ.10,000 பராமரிப்பு தொகை, இலவச கட்டாய கல்வி உள்ளிட்டவை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தீபாவளியை தொடர்ந்து இந்த வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு., அரசு முக்கிய அறிவிப்பு!!