புதிதாக திருமணம் முடித்தவர்கள், ரேஷன் கார்டில் செய்ய வேண்டிய புதிய அப்டேட் குறித்த வழிமுறைகளை, அரசு விரிவாக வெளியிட்டுள்ளது.
அரசு அறிவிப்பு:
பொது விநியோகத் திட்டத்தின் கீழ், குடும்ப அட்டை வாயிலாக பொதுமக்களுக்கு மானிய விலையில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. ரேஷன் பொருட்களை பெறுவதோடு மட்டுமல்லாமல், அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கும் குடும்ப அட்டை முக்கிய ஆவணமாக உள்ளது. இந்த குடும்ப அட்டையில், புதிதாக திருமணம் முடித்தவர்கள் மற்றும் குழந்தைகளின் பெயர்களை இணைப்பவர்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்த நெறிமுறைகளை அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
அதாவது, புதிதாக திருமணம் முடித்தவர்கள் திருத்தம் செய்யப்பட்ட ஆதார் அட்டை நகலுடன், ரேஷன் அட்டையில் பெயர் சேர்க்க சம்பந்தப்பட்ட உணவு துறை அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். இல்லையெனில், ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க, உணவு வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
மேலும், ரேஷன் கார்டில் குழந்தையின் பெயரை சேர்க்க வேண்டும் என்றால், குழந்தையின் ஆதார் கார்டு மற்றும் பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றை வைத்து, ஆன்லைனில் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். இதை செய்து முடிக்காதவர்கள், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் ரேஷன் பொருட்களை பெற முடியாத சூழல் உருவாக வாய்ப்புள்ளது என அரசு தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்