தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் அவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு நடைபெறும் என்று தகவல் வெளிவந்த நிலையில் தற்போது இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
10ம் வகுப்பு தேர்வு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்றின் பாதிப்பை விட தற்போது மிக அதிகமான அளவில் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக 9 முதல் 11ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவிருந்த பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வுகள் நடத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்ற தகவல் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்தது.
‘ரொம்ப தப்பா பேசுற கனி’ – கொந்தளித்த பாபா மாஸ்டர்! வைரலாகும் “ஸ்டார்ட் மியூசிக்” ப்ரோமோ!!
இந்நிலையில் தற்போது இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. அதன்படி பள்ளிக்கல்வித்துறை கூறியதாவது, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவிலான தேர்வு நடத்தப்படும் என்னும் தகவல் தவறானது. போலியான தகவல்களை பரப்பி மாணவர்களை குழப்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.