ஃபேஸ்புக் லைவில் பிரபல பெங்காலி நடிகரான சைபல் பட்டாச்சார்யா தற்கொலைக்கு முயற்சி செய்து காயங்களுடன் வந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.
சைபல் பட்டாச்சார்யா:
சினிமா வட்டாரங்களில் இந்த இரண்டு வாரமாக தொடர்ந்து மரண ஓலங்கள் கேட்டு கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ப்ரொதோமா கதம்பினி என்ற பெங்காலி சீரியல் மூலம் தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலம் ஆனவர் தான் சைபல் பட்டாச்சார்யா. இதன் மூலம் சீரியலில் திரைக்கதை எழுதும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
மேலும் சில படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது எந்த வாய்ப்பும் கிடைக்காமலும் மற்றும் வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார். அதை நினைத்து வருத்தத்தில் இருந்த நடிகர் சைபல் பட்டாச்சார்யா திடீரென தற்கொலை முயற்சியை கையாண்டுள்ளார். அதாவது, திங்கட்கிழமை இரவு கூர்மையான ஆயுதத்தால் தன் தலை மற்றும் வலது காலில் காயங்கள் ஏற்படுத்திக் கொண்டார்.
அதன் பிறகு அந்த காயங்களுடன் Facebook லைவில் வந்த சைபல் பட்டாச்சார்யா ரசிகர்களிடம் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, வேறு எந்த வழியும் இல்லாமல் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று கூறும்போது இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்ட போது, நடிகர் சைபல் பட்டாச்சார்யா மன அழுத்தத்துடன் இருந்ததால் குடித்துவிட்டு இந்த முடிவை எடுத்துள்ளார் என தெரிய வந்துள்ளது. Facebook லைவ்வில் பிரபல நடிகர் இவ்வாறு தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்