இந்தியாவின் புதிய டிஜிட்டல் கொள்கை.. ஓகே சொன்ன ஃபேஸ்புக், கூகுள், வாட்ஸ்ஆப்!!!

0

மத்திய அரசு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி அறிவித்த புதிய டிஜிட்டல் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதாக சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், கூகுள், வாட்ஸ்ஆப் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் சமூக வலைத்தளங்களுக்கும் ஓடிடி தளங்களுக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த புதிய கட்டுப்பாடுகள் 3 மாதங்களுக்கு பிறகு அமலுக்கு வரும் என தெரிவித்தது. மே மாதம் 26 ஆம் தேதிக்குள் இந்த புதிய டிஜிட்டல் கொள்கைகளை சமூக ஊடகங்கள் அறிவிக்கவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

 

தற்போது இந்த புதிய தகவல் தொழில்நுட்ப வழிகாட்டுதல்களுக்கு இணங்க ஃபேஸ்புக், கூகுள், வாட்ஸ்ஆப் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் புதிய டிஜிட்டல் கொள்கைகளின்படி கட்டாயமாக நியமிக்க வேண்டிய தனி அதிகாரிகளை நியமிப்பதாகவும் அந்நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன. கூகுள், லிங்க்ட்இன், ஷேர்சாட், டெலிகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக தளங்கள் புதிய விதிகளின் தேவைக்கேற்ப அமைச்சகத்துடன் விவரங்களை பகிர்ந்துள்ளனர்.

ஆனால் தற்போது வரை ட்விட்டர் நிறுவனம் இதுகுறித்து எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை.  ஆனால் மத்திய அரசிடம் ட்விட்டர் நிறுவனம் இது சம்மந்தமாக வழக்கறிஞர் ஒருவரை தனி அதிகாரியாக நியமிப்பதாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here