இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கடந்த ஆறு மாதத்திற்குள் 300 கோடிக்கும் மேற்பட்ட போலி முகநூல் கணக்குகளை முடக்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முகநூல் முடக்கம்:
சமூக வலைத்தளங்களில் மக்கள் மத்தியில் முக்கிய இடத்தைப் பெற்றிருப்பது முகநூல் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் பயனர்கள் உள்ளனர். உலகின் எந்த மூலை முடுக்குகளில் உள்ள நபர்களையும் எளிதில் இந்த முகநூல் மூலம் கண்டறியலாம்.
இந்த நிலையில், நடப்பாண்டின் தொடக்கத்தில் இருந்து கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 300 கோடிக்கும் அதிகமான போலி முகநூல் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்களுடைய பயனாளர்களின் பாதுகாப்பிற்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 1,300 கோடி டாலர்களை செலவளித்திருப்பதாகவும், இதற்காக, 40,000 பேர் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்