மத்திய பாதுகாப்பு துறை ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாஜக தொண்டர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.
அமைச்சருக்கு கொரோனா :
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1.79 லட்சம் நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அண்மையில் எச்சரிக்கை விடுத்தனர். இந்த வைரஸ் தொற்றுக்கு, பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மருத்துவர்கள் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு லேசான அறிகுறிகள் உள்ளதால், தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், சமீபத்தில் தன்னை நேரில் சந்தித்தவர்கள் தங்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறு ராஜ்நாத் சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
I have tested positive for Corona today with mild symptoms. I am under home quarantine. I request everyone who have recently come in my contact to isolate themselves and get tested.
— Rajnath Singh (@rajnathsingh) January 10, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்